ஜெயலலிதாவுக்கு இல.கணேசன் புகழாரம்
சென்னை:
ஜெயலலிதாவிடம் காணப்படும் மாற்றம் தொண்டர்களிடமும் காணப்பட வேண்டும் என தமிழக பா.ஜ.க.செயலாளர்இல. கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள் வெற்றியைகொண்டாடுவது இயற்கையானதுதான். அது அளவு கடந்துவிடக் கூடாது. வன்முறையில் ஈடுபடுவது, மற்றகட்சியினரைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
தோல்வியடைந்தவர்களும் தோல்வியை எண்ணி செய்யும் செயல்களும் பாராட்டதக்கதல்ல. அரசியல் கட்சியினர்தாக்கப்பட்டதாக வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பு பற்றி மக்கள் மன்றம் கவலைப்படவில்லை என்பது மேலும் விரிவடையுமானால் அது சட்டம்ஒழுங்கை பாதித்து அராஜகத்துக்கு வழி செய்து விடும்.
ஜெயலலிதா தனது பயணத்தின் போது போக்குவரத்து தடைபடாது என கூறியிருப்பதும், மத்திய-மாநிலஅரசுகளிடையே மோதல் இருக்காது என கூறியிருப்பதும் நல்ல அறிகுறி.
தலைமையில் தெரிகின்ற இந்த மாற்றம் தொண்டர்களிடமும் பிரதிபலிக்க வேண்டும். இல்லையென்றால் பழையநிலையே தொடர்வதாக மக்கள் நினைப்பார்கள்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து என்ற குறளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications