For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டியில் மலர்க்கண்காட்சி: 100 சிறப்பு பேருந்துகள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ஊட்டியில் நடந்து வரும் மலர்க் கண்காட்சியையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 100 பஸ்களை அரசுப்போக்குவரத்துக் கழகம் தினம் இயக்குகிறது.

ஊட்டியில் 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்குகிறது. ஊட்டி சீசனை முன்னிட்டு இதனை காண வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் திருப்பூரிலிருந்தும் புறப்படுகிறது. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் வழியாக செல்கின்றன.

பஸ்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் கவனித்து சரி செய்ய, சர்வீஸ் வேன் ஒன்று இயங்குகிறது. இந்தவேன்கள் குறிப்பிட்ட இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

மேலும் தனியார் வாகனங்கள் பழுதடைந்தால் அதனையும் சரி செய்ய மோட்டார் சைக்களில் வலம் வரும்மெக்கானிக்குகள் இடம் பெறுகின்றனர்.

இவர்கள் உங்களுக்கு உதவ என்ற பேட்ஜ்களுடன் சுற்றுவர். மேலும், ஊட்டியில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X