சிறைக்குள் பரிதி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சிறைக்குள் உண்ணாவிரதம்இருக்கிறார்.
எழும்பூர் தொகுதி அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியனுடைய ஆதரவாளர்கள் மீது தாக்குதல்நடத்தியதாக பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடக் கோரி, பரிதி தாக்கல் செய்த மனுவையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால்அரசின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டு, ஜாமீனுக்குத் தடை வாங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பரிதி மீண்டும்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில் தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை பரிதி தொடங்கியுள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications