கருணாநிதி கைதுக்கு காரணமான சென்னை பாலங்கள்
சென்னை:
சென்னையில் ரூ. 12 கோடி செலவில் பாலங்கள் கட்டியதில் கருணாநிதி ஊழல் செய்துள்ளதாகக் கூறி அவரைஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது.
சென்னையில் திமுக ஆட்சியில் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன. கிட்டத்தட்ட 10 பெரிய பாலங்கள்கட்டப்பட்டன.
இந்த பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக ஜெயலலிதா தனது தேர்தல்பிரச்சாரத்தின்போதே தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் இது குறித்து நடவடிக்கைஎடுக்கப்படும் என்று பேசியிருந்தார்.
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரையான 5 ஆண்டுகால ஆட்சியின் போதுசென்னைநகரில் 10 பாலங்கள் கட்டப்பட்டன.
சென்னை நகரில் கட்டப்பட்ட இந்த பாலங்கள் விஷயத்தில் கருணாநிதியின் மகனும்சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலினுக்கும் அதிக ஈடுபாடு காட்டினார்.இதன் காரணமாக ஸ்டாலினும் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த பாலங்களைக் கட்ட காண்ட்ராக்ட் பெற்றவர்களிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முறைகேடு நடந்திருப்பதற்கானஆதாரங்களைத் திரட்ட முயன்று வந்தனர்.
இப்போது கருணாநிதி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படிப்பட்ட ஆதாரம் ஏதும்போலீசாரிடம் சிக்கியிருக்லாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications