கருணாநிதி கைது காட்சியை பார்த்த வன்னிய அடிகளார் மரணம்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:

கருணாநிதி கைது செய்யப்பட்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த வன்னிய அடிகளார்அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இந்தகாட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த காட்சியை பார்த்த வன்னியர் சங்க மாநில தலைவர் வன்னிய அடிகளார் கலைஞருக்குஇந்த கதியா என்று கூறியவாறே மயங்கி விழுந்தார்.

அவர் உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்இறந்து போனார்.

வன்னிய அடிகளார் இறந்த செய்தி கிடைத்ததும் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, உழவர்உழைப்பாளர் பொது நல கட்சி மாநில செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட பலதலைவர்கள் வன்னிய அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வன்னிய அடிகளாருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். வன்னிய அடிகளார்1975ம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சிஆசிரியராக இருந்தார்.

வேலையை ராஜினாமா செய்துவிட்டு வன்னியர் சங்கத்தை தொடங்கினார்.

1998ம் ஆண்டு உழவர் உழைப்பாளர் பொதுநல கட்சியை தொடங்கினார். 6மாதங்களுக்கு முன் தன் கட்சியின் பெயரை உழைப்பாளர் கட்சி என மாற்றி அமைத்தார்.

வன்னிய சமுதாய மக்களிடையே மிக பிரபலமான தலைவராக இருந்தார் இவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+