இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவை கூடுகிறது.
சென்னையில் பாலம் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் தலைமைச்செயலர் நம்பியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு பிரதமர் வாஜ்பாய் வீட்டில் கூடுகிறது.
அப்போது கருணாநிதி மற்றும் பிற தலைவர்கள் கைது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசி முடிவெடுக்கப்படும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications