ஜெ. கொடும்பாவியை எரித்த தாமரைக்கனி மகன் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்த வழக்கில் தாமரைக்கனியின் மகன் ஆணழகன் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் தாமரைக்கனியின் இளைய மகன் ஆணழகன் படித்து வருகிறார்.
இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கைதைக் கண்டித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர்அரிச்சந்திரனுடன் ஜெயலலிதா உருவ பொம்பைக்குத் தீ வைத்தார்.
இதையடுத்துப் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாமரைக்கனியின் இன்னொரு மகன் இளஞ்செழியன் அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications