மருத்துவமனையில் மாறன் கைது
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்முரசொலி மாறனைப் போலீஸார் கைது செய்தனர்.
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியைக் கைது செய்ய போலீஸார் முயன்ற போது, அவர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக முரசொலி மாறன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் ரத்தக்கொதிப்பு அதிகரித்ததன் காரணமாக மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டார். காலில் காயம் பட்ட முரசொலி மாறனுக்கு 4 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் சந்திரபோஸ் மருத்துவமனைக்கு வந்து வரும் 3 ம் தேதி வரைமாறனை காவலில் வைத்திருக்கும்படியும், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் உத்தரவிட்டுவிட்டுச்சென்றார்.












Click it and Unblock the Notifications