பெர்னாண்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆராய்வதற்காக ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வந்துள்ளது.

இவர்கள் தற்போது ஆளுநர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.

சென்னையில் பாலம் கட்டியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச்செல்லப்பட்டார்.

இதையடுத்து, சென்னையில் கூடிய தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு356 ஐ பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் சனிக்கிழமை மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் மூவர் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்துஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையிலான மூவர் குழு சென்னை வந்துள்ளது. இவர்கள் தற்போது கவர்னர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+