தமிழகம் முழுவதும் 24, 000 திமுகவினர் கைது
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் 2 வது நாளாகப் பதட்டம் தொடர்கிறது.
தமிழகத்தில் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பஸ்களுக்குத் தீ வைப்பு மற்றும் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 24, 000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே போலீஸார் உதவியுடன் ஒரு சிலபஸ்கள் இயங்கி வருகின்றன. திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,800 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு முக்கிய திமுக பிரமுகர்களான ஏ.எல்.சுப்ரமணியம்மற்றும் கருப்பசாமி பாண்டியன் உள்பட 500 க்கும் மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் முக்கிய திமுக பிரமுகர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மற்றும் நெல்லிக்குப்பத்தில் பல இடங்களில் பஸ்களுக்குச் தீ வைக்கப்பட்டன.
தண்டவாளம் தகர்ப்பு:
நெல்லிக்குப்பத்தில் 50 அடி தூரம் தண்டவாளம் தகர்க்கப்பட்டு அங்கு தீ வைக்கப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் திமுக பிரமுகர்கள்சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறாத வகையில் மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications