வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆக்ரா:
பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தைஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணிக்குத் துவங்கியது.
காலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கிளம்பி சிறப்பு விமானம் மூலம் 9.45 மணிக்கு ஆக்ராவந்தார் முஷாரப். சனிக்கிழமை நள்ளிரவிலேயே பிரதமர் வாஜ்பாய் ஆக்ரா வந்துவிட்டார்.
முஷாரப் ஆக்ராவின் மிகப் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.
பின்னர் சரியாக 11.45 மணிக்கு வாஜ்பாய் தங்கியுள்ள ஜேபி பாலஸ் ஹோட்டலுக்கு முஷாரப் வந்தார்.
அவரை ஹோட்டல் வாசலில் பிரதமர் வாஜ்பாய் கை குலுக்கி வரவேற்றார். வாஜ்பாய் தனது வழக்கமான பாணியில்குர்தா அணிந்திருந்தார். முஷாரப் தனது ராணுவ உடையைக் கலைந்துவிட்டு கறுப்பு பேண்ட், வெள்ளை சட்டையில்வெகு காஷூவலாக வந்திருந்தார்.
இருவரும் சுமார் 1 நிமிடம் கை குலுக்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க வசதியாகஇரு தலைவர்களும் நெருங்கி நின்றனர். ஆனால், வாஜ்பாயின் முகத்தில் இருந்த புன்னகை முஷாரபிடம் இல்லை.ராணுவ இறுக்கத்துடன் தான் அவர் இருந்தார்.
பின்னர் அவரை இந்திய அமைச்சர்கள் அத்வானி, ஜஸ்வந்த் சிங், முரசொலி மாறன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர்வரவேற்றனர்.
அடுத்து பிரதமர் வாஜ்பாயும், அதிபர் முஷாரபும் தனியே பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். இது அரை மணிநேரம் நடக்கும். இதில் தான் எந்தெந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது என்பது குறித்து இருவரும் முடிவுசெய்வர்.
பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.