மனித உரிமை கமிஷனிடம் தி.மு.க. புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடும்பத்தினருடன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக போலீசின் அராஜக போக்குதான் காரணம்என மனித உரிமை கமிஷனிடம் தி.மு.க. புகார் கொடுத்து உள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மத்திய-மாநில மனித உரிமை கமிஷனிடம் தி.மு.க. சார்பில் அக்கட்சியின்பொருளாளர் ஆற்காடு வீராசாமி புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த ரமேஷ் , தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். அந்தத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் இந்த புகார் மனுவை கொடுத்து உள்ளேன்.

ரமேஷ் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். ரமேஷ் வீட்டிற்கு அடிக்கடி போலீசார் வந்து சென்றதும்,நள்ளிரவில் வந்து மிரட்டியதும், ரமேஷின் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தான் எழுதிய கடிதத்திலும்,போதைப் பொருள் வைத்திருந்ததாக தன் மேல் போலீசார் பொய் வழக்கு போட்டுவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரமேஷ் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குகள் போடப்படுவது சகஜம். சென்ற முறைஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது உயர் நீதிமன்ற நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குபோடப்பட்டது இதற்கு எடுத்துக்காட்டு.

போலீஸ் தங்கள் கையில் உள்ள போதைப் பொருளை, ஆட்சியில் உள்ளவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின்அரசியில் எதிரிகள் வீட்டில் வைத்து விடுகின்றனர். பின் அது தொடர்பாக வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில்அராஜக ஆட்சி நடப்பதற்கு இது போதுமான ஆதாரம்.

ரமேஷ் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதன் மூலம் போலீஸ்அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ரமேஷ் தனது குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசாரின் அத்துமீறல்கள் குறித்துவிசாரித்து நீதி வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+