சிவாஜி பெற்ற விருதுகள்
பால்டல் பகுதியிலும் 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
லக்ஷார் செய்தித் தொடர்பாளர் அமர்நாத் யாத்ரிகர்கள் எந்த விதமான பயமும்இல்லாமல் தங்கள் யாத்திரையை மேற்கொள்ளலாம். ஆனாலும் ஜம்மு - காஷ்மீர்பகுதியில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முகாம் மீதும் மற்ற நிலைகள் மீதும்எங்கள் தாக்குதல் தொடரும் என்று கூறியிருந்தார்.
1990ம் ஆண்டு தீவிரவாத அமைப்புகள் அமர்நாத் குக்ைகோவிலுக்கு யாத்ரிகர்கள்வரக்கூடாது என தடை விதித்திருந்தன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணத்தால்1991ம் ஆண்டு 15,999 யாத்ரிகர்கள் மட்டுமே அமர்நாத் குகைக் கோவிலுக்குவந்திருந்தனர்.
சென்ற ஆண்டு அதிகபட்சமாக 173,334 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைமேற்கொண்டனர்.
இந்த ஆண்டு இதுவரை 100,000 பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர் எனகூறப்படுகிறது.
இவர்களில் 85,000 பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பி சென்றுவிட்டனர்.
1999ம் ஆண்டு பாலகாம் முகாமில் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.இவர்களில் பலரும் கூலித் தொழிலாளிகள்.
இந்த யாத்திரை ரக்ஷா பந்தன் நாளான ஆகஸ்டு மாதம் 4ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
யு.என்.ஐ.