For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பு விமான நிலையம் செயல்படத் தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

கொழும்பு சர்வதேச விமான நிலையம் 37 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு விடுதலைப் புலிகளின் தாக்குதலால் மூடப்பட்ட பண்டாரநாயகேசர்வதேச விமான நிலையம் புதன்கிழமை மாலை 5 மணிக்கு செயல்படத் தொடங்கியது.

சென்னைக்குத் திருப்பிவிடப் பட்ட சிட்னி-கொழும்பு விமானம் நேற்று மாலை 5 மணிக்கு 160 பயணிகளுடன்இங்கு வந்திறங்கியது.

அதே போல கொழும்பிலிருந்து பாரிசுக்கு மாலை 6.25 மணிக்கு முதல் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச்சென்றது. தொடர்ந்து மாலே, ரோம், பிராங்க்பர்ட், லண்டன், டோக்கியோ ஆகிய இடங்களுக்கும் விமானங்கள்புறப்பட்டுச் சென்றன.

பிராங்பர்ட், பாரிஸ், லண்டன், சூரிச் ஆகிய இடங்களில் இருந்தும் இலங்கை ஏர்லைன்ஸ் விமானங்கள் கொழும்புவந்திறங்கின.

ஆனால், பிற வெளிநாட்டு விமான சர்வீஸ்கள் எதுவும் கொழும்புவுக்கு விமானங்களை அனுப்பவில்லை.இந்தியன் ஏர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சர்வீஸ் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல கத்தார் ஏர்லைன்ஸ்சும் இன்று முதல் கொழும்புவுக்கு மீண்டும் விமானங்களை இயக்கும் எனத்தெரிகிறது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நானை முதல் விமானங்களை இயக்க உள்ளது.

லண்டனைச் சேர்ந்த லாய்ட்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுவிமானங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட்டனர்.

இப்போது இலங்கை ஏர்லைன்சிடம் வெறும் 6 விமானங்கள் தான் உள்ளன. 6 விமானங்கள் எரிந்துபோய்விட்டன.புலிகளின் தாக்குதலில் 8 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களும், 6 பயணிகள் விமானங்களும் தகர்க்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X