ஸ்டாலின் பெயரைச் சேர்க்க சொல்லி போலீஸ் மிரட்டியது: பங்க் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி கடத்தப்பட்ட வழக்கில், ஸ்டாலின் பெயரையும் சேர்க்குமாறு துணை போலீஸ்கமிஷனர் தன்னை மிரட்டியதாக பங்க் குமார் நீதிமன்றத்தில் கூறினார்.

சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்களில் ரோடு போடுவதற்கான காண்ட்ராக்டிற்காக கமிஷன் கேட்டு மிரட்டியதாகதெய்வசிகாமணி அளித்த புகாரின் பேரில், முன்னாள் திமுக எம்.பி. பரசுராமன் கைது செய்யப்பட்டார். பின்னர்அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பங்க் குமார், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி விசாரித்தபோது, பங்க் குமார் கூறியதாவது:

என்னைப் போலீசார் துன்புறுத்தவில்லை. ஆனால், துணை போலீஸ் கமிஷனர் முருகேசன் என்னைவிசாரிக்கும்போது, தெய்வசிகாமணியைக் கடத்திய வழக்கில், ஸ்டாலின், தா. கிருஷ்ணன் ஆகியோருடையபெயர்கள் உள்பட 5 பேர் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று என்னை மிரட்டினார்.

இது தவிர, 3 கார் நம்பர்களையும் சேர்த்துச் சொல்லச் சொல்லி என்னை மிரட்டினார். இந்த வழக்கைவலுப்படுத்தவே அவ்வாறு என்னைச் சொல்லச் சொன்னார்.

அப்படி நான் சொல்லவில்லை என்றால், வேறு கேஸ் போட முடியும் என்றும் அப்போது விவரங்களை வரவழைக்கமுடியும் என்றும் என்னை மிரட்டினார் என்று நீதிபதியிடம் கூறினார் பங்க் குமார்.

இதைத் தொடர்ந்து, பங்க் குமாரின் காவலை ஆகஸ்டு 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதிஅசோக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+