மனித உரிமை கமிஷனிடம் ஸ்டாலின் மீண்டும் புகார்
சென்னை:
மனித உரிமை கமிஷனிடம் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
தொடக்கத்திலேயே நான் தெரிவித்துக் கொள்வது என்னவெனில், இம்மாதம் 23ம் தேதி முதல் பிரதிவாதி(உள்துறைச் செயலாளர்) எழுதிய கடிதம் செல்லத் தக்கதும் அல்ல, ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல என்பதுதான்.
ஜூன் 30ம் தேதி, அத்துமீறி என் வீட்டில் நுழைந்த போலீசார் என் குடும்பத்தாரிடமும் வேலைக்காரர்களிடமும்மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமாக அவர்களைத் தாக்கியுமுள்ளனர். குறிப்பாகஎன் வீட்டுப் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்துள்ளனர்.
இவற்றைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பக்கோரி, மனித உரிமை கமிஷன் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன்.
நீதிபதி ராமன் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு 7ம் தேதி நியமித்துள்ளது.கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது, போலீசார் அத்துமீறி நடந்துகொண்டார்களா என்பது குறித்து மட்டுமே அந்த விசாரணைக் கமிஷன் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.
என் வீட்டில் போலீசாரின் அத்துமீறல் பற்றி இந்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரிக்கவில்லை. எனவே என்புகார் தொடர்பாக, முதல் பிரதிவாதி அளித்துள்ள பதில் ஏற்கத்தக்கதல்ல.
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (1993) பிரிவு 36ன் படி, என் மனுவை விசாரிக்காமல் இருக்க முடியாது.
மனித உரிமைகள் மீறப்படும்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்என்பதற்காகத்தான் மனித உரிமைச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
மரியாதைக்குரிய மாநில மனித உரிமை கமிஷன் உடனடியாக உகந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் நீதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications