மனநோயாளிகளைத் துரத்தும் உறவினர்கள்
சென்னை:
மனநலக் காப்பகங்களில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் மனநோயாளிகளை ஏதாவது ஒரு வழக்கில் ஜெயிலில்அடைக்கும்படி அவர்களின் உறவினர்கள் கோருவதாக போலீசார் கூறினர்.
இந்நிலையில் காப்பகங்களில் உள்ள தங்கள் உறவினர்களை வந்து அழைத்துக் கொள்ள பலர் இன்னும்தயங்குகிறார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பலருக்கு விருப்பமில்லை.
மேலும், ஏதாவது ஒரு வழக்கைப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்கும்படி சில உறவினர்கள் கூறுவதாகபோலீசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது, மனநோயாளி குணமடைந்துவிட்டார் என்று அவர்களுக்குநம்பிக்கை ஏற்படவில்லை. இவர்களை வீட்டில் கொண்டு வைப்பதால் அங்குள்ளவர்களைத் தாக்கியும்,பிரச்சணைகளை உண்டாக்கியும் பல இடையூறுகளைத் தறுவார்கள் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.
இதுபோலத் தான் சென்னையிலிருந்து மும்பையைச் சேர்ந்த கற்பினிப் பெண் ஒருவர் குணமடைந்து வீட்டிற்குஅனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது கணவர் தன் மனைவி குணமடைந்து விட்டதை நம்பாமல் திருப்பிஅனுப்பிவிட்டாராம். இதனால் அந்தப்பெண் மீண்டும் சென்னையில் உள்ள அந்தக் காப்பகத்திற்கேவந்துவிட்டாராம்.
மேலும் ஏர்வாடி, குணசீலத்தில் மட்டும் இந்த மாதிரி மனநலக்காப்பகங்கள் தற்போது இல்லை. ஆனால், சிதம்பரம்அருகே உள்ள கிள்ளை, மதுரையில் கோரிப்பாளையம், குற்றாலம், காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் எனதமிழ்நாட்டின் பல பகுதிகளில் இவை செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு இடத்திலும் மனநோயாளிகளை அவர்கள் நடத்தும் விதம் மாறுபடுகிறது. சில இடங்களில்அனைவரையும் சங்கிலியால் கட்டிவைக்கிறார்கள். சில இடங்களில் மூர்க்கத் தனமான நோயாளிகளை மட்டும்சங்கிலியால் கட்டுகிறார்கள்.
குணசீலத்தில் 48 நாள் தங்க வைக்கிறார்கள். முறையான சிகிச்சை எதுவும் அளிக்கப்படுவதில்லை.இறைநம்பிக்கைதான் ஒரே மருந்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications