சட்டசபை வளாகத்தில் திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் மோதல்
சென்னை:
சட்டசபை வளாகத்தில் திமுக - அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்தின் போது தமிழக முதல்வர் தலைமையில்எம்.எல்.ஏக்கள் மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கம்.
இதன் படி இன்று (திங்கள்கிழமை) மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்காக சட்டசபை நடவடிக்கைகள் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டன.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபையைவிட்டு வெளியே வந்தனர். வளாகத்தில்கூடியிருந்தனர்.
தி.மு.க. உறுப்பினர் பரிதி இளம் வழுதி 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால்தி.மு.க உறுப்பினர்கள் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் லாபியில் கூடியதும், முன்னாள் அமைச்சரும்,அ.தி.மு.க. எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் தி.மு.க எம்.எல்.ஏக்களைபார்த்து உரத்த குரலில் ஏதோ கூறினார்.
அவர் தகாத வார்த்தையை உபயோகப்படுத்தியதாகக் கூறிய தி.மு.க. எம்.எல்.ஏக்களும்பதிலுக்கு குரல் கொடுத்தனர்.
இதையடுத்து இரண்டு கட்சி எம்.எல்.ஏக்களும் மாறி மாறி பெரும் குரலில்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபை லாபியில் கூச்சலும், குழப்பமும், பரபரப்பும்ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர்கள் வந்து சமாதானப்படுத்திய பின்னர் கலைந்து சென்றனர்.