சுப்பிரமணிய சுவாமியின் புதிய அவதாரம்
சென்னை:
நாட்டின் ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக கமிட்டி ஒன்றைஅமைக்க இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
கொஞ்சகாலம் அமைதியாக இருந்த சுவாமி இப்போது மீண்டும் வெளிச்சத்துக்வந்திருக்கிறார். எங்கெல்லாம் சட்டம் மீறப்படுகிறதோ அதை எதிர்த்துப் போராட ஒருஅமைப்பைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
நாட்டின் ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக கமிட்டி ஒன்றைஅமைக்க திட்டமிட்டுள்ளேன். இந்த கமிட்டியை அமைப்பது குறித்து 12 முக்கியதலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன்.
திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட முறை மிகவும் தவறானது. திமுகபேரணியின் போது திமுக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும்கண்டிக்கத்தக்கது.
நான் அமைக்க உள்ள கமிட்டி செப்டம்பர் மாதம் மத்தியிலிருந்து தன் பணியைதொடங்கும்.
நாடு முழுவதும் சட்ட விதிகள் மீறப்படுவது குறித்து இந்த கமிட்டி கண்காணிக்கும்.முதலில் தனது பணியை தமிழகத்திலிருந்துதான் தொடங்கும்.
கருணாநிதியும், இரண்டு மத்திய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குபுறம்பானது.
ஒருவரை கைது செய்ய வேண்டுமானால் எந்த விதமான முறைகள் பின்பற்ற வேண்டும்என்று சட்டக் கமிஷன் இந்திய அரசுக்கு கூறியுள்ள வரைமுறையை மீறி தமிழக அரசுநடந்து கொண்டுள்ளது.
புதிதாக தொடங்கவுள்ள கமிட்டி குறித்து கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். விரைவில் அவரை நேரில் சந்தித்தும் பேசவுள்ளேன்.
நாட்டின் அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜெயலலிதாவின் அரசுடிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்குஅழைத்துக் கொள்வது குறித்து, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைஎடுக்கவில்லை என்றார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications