நியூயார்க்கில் முஷாரபை சந்திக்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா.சபைக் கூட்டத்தில், பாகிஸ்தான் அதிபர் முஷாரபை, பிரதமர் வாஜ்பாய்சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார்.
செப்டம்பர் மாதம் நியூயார்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பங்கேற்கிறார்.அப்பேது அவர் பாகிஸ்தான் அதிபர் முஷாரபை செப்டம்பர் 19ம் தேதி சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
இது குறித்து தனது விருப்பத்தை பாகிஸ்தான் தூதர் அஷ்ராப் ஜஹாங்கீர் குவாசி மூலமாக, இந்தியவெளியுறவுத்துறைச் செயலாளர் கோகிலா ஐயரிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் 2 நாடுகளுக்கிடையில் உள்ள உறவை மேம்படுத்துவது குறித்தும், ஆக்ராபேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்வது குறித்தும் 2 தலைவர்களும் பேசுவார்கள்.
ஆக்ரா பேச்சுவார்த்தை ஒரு துவக்கமே தவிர, 2 நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.இனி வரும் காலங்களில் 2 நாடுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் கலையப்பட்டு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படஇந்தப் பேச்சுவார்த்தைகள் உதவும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபரும் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பது குறித்து உறுதி செய்துள்ளார். அவர்கூறியதாவது,
இந்திய பிரதமருடன் நியூயார்க்கில் 2 நாடுகளுக்கிடையில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேச உள்ளேன்.
மேலும் ஆக்ரா பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2 நாடுகளுக்கிடையில் உள்ள உறவு சற்று மேம்பட்டுள்ளது. ஆனால்காஷ்மீர் பிரச்சனையில் மட்டும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்திய இராணுவம் இந்திய எல்லையில்யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச அளவில் சட்டவிரோதமான செயல். ஆனால் காஷ்மீர் மக்களின் சுய உரிமைக்கு பாகிஸ்தான் அரசுஅனைத்து வழிகளிலும் ஆதரவு அளிக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications