Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈவ்-டீசிங் கொடுமையை தடுக்க கவுன்சிலிங்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் தொடர்ந்து நடந்துவரும் ஈவ்-டீசிங் கொடுமைகளை தடுக்கபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாககன்னியாகுமரி ஆட்சி தலைவர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் தன்னை காதலிக்கவில்லை என்பதால் தன் காதலி மீதும் அவரதுசகோதரி மீதும் ஆசிட் ஊற்றி அவர்கள் முகத்தை சிதைத்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டடு குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன் இதே மாவட்டத்தில் அமுதா என்ற பெண் ஈவ்-டீசிங் காரணமாகதற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரியில் தொடர்ந்து வரும் ஈவ்-டீசிங்கிற்கு பல மகளிர் சங்கங்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில் ஈவ்-டீசிங் கொடுமைகளை தடுப்பதற்காக கன்னியாகுமரியில் உள்ளபள்ளி மற்றும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை அறிமுகத்தப்படும் என்றுகன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் ககன் தீப் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கன்னியாகுமரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம்கூறுகையில், ஈவ்-டீசிங் காரணமாக மாணவி அமுதா தற்கொலை செய்து கொண்டதுதொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈவ்-டீசிங் கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக மகளிர் சங்கத்தினர் மற்றும் சமூகநல அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பள்ளி,கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தப்படுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தவதன் மூலம் ஈவ்-டீசிங் கொடுமையை தடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+