புகை பிடிக்கத் தடை... புகையிலை உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து ஈரோடுமாவட்டம் கோபி செட்டிப் பாளையத்தில் புகையிலை உற்பத்தியாளர்கள் பேரணி நடத்தினர்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள பீடி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பீடித்தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் புகைபிடிக்கத் தடைவிதிக்கும் திட்டத்தை எதிர்த்து கோபி செட்டிப் பாளையத்தில் செவ்வாய்க்கிழமைகண்டனப் பேரணி நடந்தது. இப்பேரணியில், 5,000க்கும் மேற்பட்ட புகையிலை உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், "சிகரெட், பீடி ஆகியவற்றிற்கு தடை விதிக்கக் கூடாது. இதனால்ஆயிரக்கணக்கான புகையிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்ற பொருளில் கோஷமிட்டவாறுவந்தனர்.












Click it and Unblock the Notifications