காவிரி பிரச்சனை: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு மறுத்து விட்ட நிலையில், இப்பிரச்சனை பற்றி விவாதிப்பதற்காக,சென்னையில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், கர்நாடக அரசு உடனடியாககாவிரித் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதற்கு மறுத்து விட்டது. பருவமழை பொய்த்து விட்டதால், கர்நாடகஅணைகளில் ஏற்கனவே தண்ணீர் மிகவும் வற்றி விட்டது என்றும் கர்நாடக விவசாயிகளின் நிலையையும் யோசிக்கவேண்டும் என்றும் காரணங்கள் கூறி, கர்நாடகம் கைவிரித்து விட்டது.

இதையடுத்து, எந்த ஒரு நல்ல முடிவையும் எடுக்காமலேயே அக்கூட்டம் முடிந்துள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் அடுத்த 9 நாட்களுக்கு மட்டும்தான் போதுமான அளவாகஉள்ளது. திறந்துவிட வேண்டிய 113.93 டி.எம்.சி. நீரில், 50.73 டி.எம்.சி. நீரை மட்டுமே கர்நாடக அரசு இதுவரைதிறந்துவிட்டுள்ளது. இதனால் குறுவைச் சாகுபடிக்காக, 3.9 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள்னைத்தும் கருகி விடப் போகிறது.

எனவே இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, நாளை சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்நடைபெறவுள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+