ஜெ. என்ன செய்யலாம்?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அவர்பதவியை ராஜினாமா செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஜெயலலிதா, உடனடியாக முதல்வர்பதவியிலிருந்து விலகுவதே சரியானதாக இருக்கும் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கியக் கட்சியின் தலைவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டபோது,பெயர் வெளியிட வேண்டாம் என்று கூறி அவர் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது தவறுஎன்று மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது சுப்ரீம் கோர்ட். தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராகமுடியும் என்றால் பிறகு சட்டம் எதற்கு, நாளையே வேறு ஒருகொலைக் குற்றவாளியும் முதல்வராகி விட முடியுமே,மக்கள் தீர்ப்பு மட்டும் இருந்தால் போதாது, சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடுமையாகக்கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிச்செய்யாமல் போனால், அவரது அரசை டிஸ்மிஸ் செய்யக் கூறி சுப்ரீம் கோர்ட் உத்தரவிடலாம். அப்படி நேர்ந்தால்அது தமிழகத்திற்குத்தான் அவமானமாக இருக்கும். அதுபோன்ற நிலை நேருவதற்கு முன் தனது பதவியைஜெயலலிதா ராஜினாமா செய்து இப்போதாவது ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்றார்.
இதேபோன்ற கருத்தையே மதிமுக தலைவர் வைகோவும் திருச்சியில் வியாழக்கிழமை நிருபர்களிடம்தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணை குறித்து அதிமுக தரப்பில் இதுவரை யாரும்எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பெருத்த மவுனம்தான் அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications