இந்தியர்கள் நிலை என்ன? தவிப்பில் உறவினர்கள்
அட்டர்னி ஜெனரல் பதில்
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பதிலளித்தார் சொராப்ஜி. அவர் கூறியிருப்பதாவது:
முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே தவறு என்று வரும்போது, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள்பதவி வகிப்பதும் தவறுதான்.
மேலும், முதல்வராக இல்லாத அமைச்சரவை இருக்கவே முடியாது. அவர் பதவியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில்,அந்த அமைச்சரவையும் விலக வேண்டியதுதான் ஒரே வழி. லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியமுன்னாள் பிரதமர்கள் இறந்தபோது, அவர்களுடைய அமைச்சரவையும் ராஜினாமா செய்ததை இதற்குஉதாரணமாகக் கொள்ளலாம்.
ஜெயலலிதா முதல்வராகியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட பிறகும்,அவர் ராஜினாமா செய்ய மறுத்தால், தமிழக ஆளுநர் இவ்விஷயத்தில் தலையிட்டு, ஜெயலலிதாவை டிஸ்மிஸ்செய்ய முடியும்.
இதையடுத்து, தற்போது அதிகப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக கட்சி தேர்ந்தெடுக்கும் மற்றொரு தலைவரைஉடனடியாக முதல்வர் பதவியில் நியமிப்பதற்காக ஆளுநர் அழைக்க முடியும்.
எனவே, வேறு முதல்வராக வருபவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள் பதவி ஏற்பதற்கேற்ப, இந்தஅமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துதான் ஆகவேண்டும் என்று கூறினார் அட்டர்னி ஜெனரல் சோலிசொராப்ஜி.
வாதம் முடிந்தது - தீர்ப்பு ஒத்திவைப்பு
இதையடுத்து, இவ்வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. ஜெயலலிதா தொடர்ந்து தமிழக முதல்வர்பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பது இவ்வழக்கின் தீர்ப்பில்தான் உள்ளது. வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில்,இவ்வழக்கின் தீர்ப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications