For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா-வாஜ்பாய் அவசர சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் குறித்தும்,அந்த விஷயத்தில் இந்தியா எடுத்துள்ள நிலை குறித்தும் பிரதமர் வாஜ்பாய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியுடன் விவாதித்தார்.

தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்தும், பிரதமார் வாஜ்பாய் திட்டமிட்டபடி அமெரிக்காசெல்ல முடியுமா என்பது குறித்தும் மத்திய பாதுகாப்பு கமிட்டி கூடி விவாதித்தது.

இந்தக் கூட்டத்தில், தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் டென்ஷனான சூழ்நிலையில் வாஜ்பாய் அமெரிக்காசெல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரதமரின் அமெரிக்க பயணம்இப்போது சாத்தியமானது தானா என்பது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். பிரதமரின் அமெரிக்கப் பயணம்சந்தேகம்தான் என்றாலும், இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில் வாஜ்பாய் அங்கு சென்றால், அவருக்கு இந்திய அரசு கேட்டுக்கொள்ளும் அளவுக்குஅமெரிக்க அரசால் பாதுகாப்பு முடியுமா என்பது சந்தேகமாக இருப்பதால், வாஜ்பாயின் அமெரிக்க பயணம் ரத்துசெய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்தும், இந்தவிஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் வாஜ்பாய்பேச்சு நடத்தினார்.

பின்லேடன் மேலுள்ள கோபத்தால், எந்த நேரமும் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்றுகூறப்படுகிறது. அப்போது இந்தியா நடந்து கொள்ள வேண்டிய நிலை பற்றியும் இவர்கள் 2 பேரும் விவாதித்தனர்என்று கூறப்படுகிறது.

வாஜ்பாய்-சோனியா பேச்சு சுமார் 45 நிமிடங்களுக்கு நீடித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X