For Daily Alerts
Just In
எல்லையில் ஏவுகணைகளை குவிக்கிறது ஆப்கானிஸ்தான்
காபூல்:
ராணுவக் கிடங்குகளில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள தலிபான் வீரர்களுக்கு கூடுதல்ஆயுதங்களையும் தளவாடங்களையும் தலிபான் அரசு அனுப்ப ஆரம்பித்துள்ளது.
தனது வான் பகுதியை மூடிவிட்ட ஆப்கானிஸ்தான் அரசு எந்த நேரத்திலும் அமெரிக்கத் தாக்குதலை எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் டாங்கிகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் வழியாகத் தான் அமெரிக்கா தாக்கலாம் என்பதால் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் 25,000வீரர்களையும் தலிபான் குவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானும் ராணுவத்தை அந்த எல்லைப் பகுதிக்குஅனுப்பி வருகிறது.
Comments
Story first published: Monday, September 17, 2001, 5:30 [IST]