சீக்கியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
இது குறிதது இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் துயரத்தை இந்தியர்கள்உணர்ந்துள்ளார்கள். அமெரிக்காவுக்கு அனைத்து உதவிகளையும் புரிய இந்தியா தயாராக உள்ளது. இந் நிலையில்சீக்கியர்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதலில் இறங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதர் லலித் மான்சிங் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் இது தொடர்பாகஆலோசனை நடத்தினார். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தியர்கள், அரேபியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்க எம்.பிக்கள் பலரும் கண்டித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications