காவிரி ஆணையக் கூட்டம் .. ஜெ. பங்கேற்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ள காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். ஆனால்பதில் ஏதும் வராத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் 22ம் தேதி காவிரிநதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை பிரதமர் கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக வியாழக்கிழமை இரவு அவர் டெல்லிபயணமாகிறார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்திப்பார் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications