ஜெ. முதல்வராக நீடிப்பாரா? - இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து சப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றுவழங்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஒருவருக்கு (ஜெயலலிதாவுக்கு) முதல்வராகபதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு என்றும்.

முதல்வராக ஜெயலலிதா பதவியில் நீடிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி சப்ரீம் கோர்ட்டில் கடந்தமாதம் செல்வராஜ் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சார்பாக வக்கீல் வேணுகோபாலும், தமிழக அரசின் சார்பாக பி.பி.ராவும்ஆஜரானார்கள்.

மனுதாரரின் சார்பில் வக்கீல் நாரிமான் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல்சோலி சொராப்ஜி ஆஜராகி வாதாடினார்.

அனைவரும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+