நடு ரோட்டில் படுத்துத் தூங்கிய மக்கள்
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து, நகர மக்கள் அனைவரும் சாலைகளில்நடுவே வந்து, பாய் விரித்து உறங்கினர்.
செவ்வாய் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு காரணமாக, சென்னை நகர மக்கள் பெரும்பீதிக்குள்ளாயினர். வீட்டுக்குள்ளே அத்தனையையும் போட்டது போட்டபடி, தெருவுக்கு ஓடி வந்தனர்.
அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால், மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற பீதியில், மக்கள் தங்கள்வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.
நடு ரோட்டுக்கு ஓடி வந்த மக்களில் சிலர், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று பிரார்த்தனை செய்யவும்ஆரம்பித்தனர்.
இரவு சாப்பாடு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால், பெரும்பாலான மக்கள் பாத்திரம், அடுப்பு சகிதம் நடுரோட்டிலேயே அமர்ந்து சமைக்க ஆரம்பித்தனர்.
நில அதிர்வு ஏற்படுத்திய பீதியில், பலர் உறங்காமல் அரட்டை அடித்துக் கொண்டும், நண்பர்களுடன் அங்குமிங்கும்உலாவியபடியும் இருந்தனர். தூக்கம் வந்தவர்களும், நடு ரோட்டிலேயே பாயை விரித்து, தூங்கஆரம்பித்தனர்.
பொதுவாக, இரவு 10 மணிக்கெல்லாம் வெறிச்சோட ஆரம்பிக்கும் சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாம், நிலஅதிர்வு பீதியின் காரணமாக, பொதுமக்களால் நிரம்பி வழிந்தன.
சென்னை அரசுப் பொது மருத்துவமனையிலும், நோயாளிகள் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டுவெளியே ஓடி வந்தனர். பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையின் வெளி வராண்டாவிலேயே படுத்து உறங்கஆரம்பித்தனர்.
இரவு முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக நடு ரோடுகளில் நின்று கொண்டிருந்தனர். இதனால் சென்னை முழுவதும்புதன்கிழமை அதிகாலை வரை பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications