காஷ்மீர் சட்டசபை தாக்குதல்: ஜெய்ஷ் -இ-முகமது தலைவரை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு அத்வானி வற்புறுத்தல்
டெல்லி:
பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்ப்பது உண்மையென்றால் ஸ்ரீநகர் சட்டசபை கட்டிடத்தின் மீது கார் வெடிகுண்டுமூலம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி பாகிஸ்தனை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை ஸ்ரீநகரிலுள்ள சட்டசபை கட்டிடத்தின் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் கார்வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 42 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் அதிகமானோர்படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டுவரும ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்றுதெரிய வந்துள்ளது.
இது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்துதீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்ப்பது உண்மை என்றால் ஸ்ரீநதர் சட்டசபை கட்டிடத்தின் மீது கார் வெடிகுண்டுமூலம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்.
பாகிஸ்தானில் மேலும் பல தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு பாகிஸ்தான் தடைவிதிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை ஒழிப்பதில் மட்டும் அமெரிக்கா அக்கறை காட்டாமல், இந்தியாஉள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள தீவிரவாச இயக்கங்களையும் ஒழிக்க அமெரிக்கா முன்வர வேண்டும்என்று கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் சட்டசபை கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிடுவதற்காக அத்வானிஇன்று (புதன்கிழமை) காஷ்மீர் செல்கிறார்.
அப்போது அவர் ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு குறித்து அனைத்து உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடனும்ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications