சென்னை ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை:
காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் காஷ்மீர் சட்டசபை அருகே தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் கார் குண்டுதாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதிகள் உள்பட 42 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களைக் குண்டு வைத்து தாக்கவும் தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை மப்டியில் உள்ள போலீசார் கண்காணித்து வருகின்றனர். வீடியோகாமிராக்கள் மூலமும் அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தினமும் 3 முறை ரயில் தண்டவாளங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. அனைத்துச் சோதனைகளுக்கும் போலீஸ்மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காகச்செல்கிறார்கள்.
வெளியூரிலிருந்து வரும் ஒவ்வொரு ரயிலும், பயணிகள் வெளியேறிய பிறகு, கடும் சோதனைக்குஉட்படுத்தப்படுகின்றன. சோதிக்கப்பட்ட ரயில்களின் கதவுகள் மூடப்பட்டு, பாதுகாப்பாக யார்டுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
மீண்டும் அவை புறப்படுவதற்கு முன், நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரயில் நிலையங்களுக்குக்கொண்டுவரப்படுகின்றன.
பயணிகள் அனைவரும் முழுக்க முழுக்கப் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications