சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் 1,000 கன அடி நீர் உயர்ந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக சோழவரம், பூண்டி, புழல், செங்குன்றம் ஆகிய ஏரிகள் உள்ளன.
சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக, இந்த ஏரிகளில் வேகமாக நீர் நிரம்பி வந்தது.
இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,657 கன அடி ஆகும். இங்கு தற்போது பெய்த கன மழை காரணமாக1,430 கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதில் கடந்த சில நாட்களில் மட்டும் 1,000 கன அடி நீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications