தமிழக பந்த்: முழு ஆதரவில்லை
சென்னை:
தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த பந்த்துக்கு மக்களிடம் முழு ஆதரவு கிடைக்கவில்லை.தமிழகம் முழுவதுமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சமீபத்தில் மின்சார, பஸ், ரேஷன் பொருள்களின் விலையும் கட்டணமும் உயர்த்தப்ட்டதைக் கண்டித்து திமுக,த.மா.கா, பா.ம.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஆனால், இந்த பந்த்துக்கு சென்னையில் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லைமாவட்டங்களில் தான் ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.
மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் இயங்கின. சில ஊழியர்கள் தான் பணிக்கு வரவில்லை. வங்கிகள் முழுஅளவில் வழக்கம்போல் இயங்கின.
அதே போல அரசு பஸ்கள் முழு அளவில் இயக்கப்பட்டன. பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல்திறந்திருந்தன.
சென்னையில் அண்ணாநகர் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், பாண்டிபஜார்போன்ற இடங்களில் பெரும்பாலான கடைகளும் திறந்திருந்தன. அண்ணாநகரில் ரெளடிகளுக்கு பயந்தே கடைகள்மூடப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பந்த்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது. நடமாடும் போலீஸ் படைகள் மாநிலம் முழுவதும் சுற்றி வந்தவண்ணம் உள்ளன.