அயோத்தி விவகாரம்: மக்களவையில் பெரும் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி விவகாரம் தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களுடன் ஐந்து மத்திய அமைச்சர்கள் ரகசியஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, இப்பிரச்சனையை எதிர்க் கட்சியினர்எழுப்பினர். மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும்அவர்கள் கரவொலி எழுப்பினர்.

இதுகுறித்து, உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள்கோரினர். பின்னர் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பி, பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பதில் அளிக்க அத்வானி அவையில் இல்லாததையடுத்து, "அவர் பயந்து கொண்டு ஓடிப்போய்விட்டார்" என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் எள்ளி நகையாடினார்.

பின்னர் தொடர்ந்து அமளி நிலவியதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+