வேலை தேடும் 85 லட்சம் இளைஞர்கள்: சிதம்பரம் கவலை
கோயம்புத்தூர்:
இந்தியாவில் ஆண்டுதோறும் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி அலைகின்றனர் என்று தமிழ் மாநிலகாங்கிரஸ் பேரவை தலைவர் ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
டாக்டர் சி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் பத்தாவது நினைவுச் சொற்பொழிவின்போது அவர் பேசியதாவது:
அவிநாசிலிங்கம் தன்னுடைய 32வது வயதில் சட்டசபை உறுப்பினரானார். அடுத்த பத்து ஆண்டுகளிலேயேஅமைச்சரானார். தன்னுடைய 60வது வயதில் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்.
தமிழைப் பயிற்று மொழியாக அறிவித்தவர் அவிநாசிலிங்கம். மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்கச் செய்தவர்.
இன்றைய இளைஞர்களும் வயதானவர்களை நம்பியிருக்காமல் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும்.
விடுதலைக்கு முன்னரும் பின்னரும் என்று இந்தியாவின் வளர்ச்சியைப் பிரித்துப் பார்ப்பதைப் போலவே, 1991க்குமுன்-பின் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
1991 வரை மொத்த வளர்ச்சி குறைவாகத்தான் இருந்தது. இதற்குப் பிறகுதான் 7 சதவீத வளர்ச்சி என்பதுசாத்தியமானது.
ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடும் வழிமுறைகளில் சில அந்நாட்டின் வேலை வாய்ப்பின்மை, வறுமை,ஒருங்கிணைந்த பொருளாதாரம் ஆகியவை முக்கியமானவை.
அரசு நிர்வாகம் சரியாக நடக்காத மாநிலங்களில்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் அதிகம்உள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களில் 44 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம் அங்கெல்லாம் அரசு நிர்வாகம் சரியாக இல்லைஎன்பதுதான்.
உதாரணமாக, பீகாரில் 16 சதவீதம் பேர் வறுமையில் வாழ்ந்தாலும், அந்த மாநிலம் பயன்படுத்திக் கொள்ளும்மானியம் 5 சதவீதம் மட்டுமே. காரணம் - இம்மாநிலத்தில் அரசு நிர்வாகம் சரியாக இல்லை.
ஆனால் கேரளாவில் வறுமையில் வாழ்பவர்கள் 2 சதவீதமாக இருந்தாலும் இம்மாநிலம் பெறும் மானியம் 10சதவீதமாகும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கையை 30 கோடியிலிருந்து 26 கோடியாக கடந்த 50ஆண்டுகளில் குறைத்துள்ளோம். இது போதாது என்றார் சிதம்பரம்.