மதுரை போலீஸ் அதிகாரியின் வாக்கி-டாக்கியைப் பறித்துக் கொண்டு ஓடிய கும்பல்
மதுரை:
மதுரையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் (எஸ்.ஐ.) வாக்கி-டாக்கியைப் பறித்துக் கொண்டு ஓடிய 4 பேரைப்போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை ரிங் ரோட்டில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை அந்த எஸ்.ஐ. ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவரை மடக்கிய 4 பேர், அவரிடமிருந்த ஒரு நவீன துப்பாக்கி, ஒரு சாதாரண துப்பாக்கிமற்றும் வாக்கி-டாக்கி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு ஓடினர்.
சுதாரித்துக் கொண்ட எஸ்.ஐ. அவர்களை வேகமாகத் துரத்தினார். ஆனால் அவர்களை அவரால் பிடிக்கமுடியவில்லை.
ஓடிய வேகத்தில் அந்த 2 துப்பாக்கிகளை மட்டும் அவர்கள் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஆனால்வாக்கி-டாக்கியை மட்டும் தூக்கிக் கொண்டு அந்தக் கும்பல் ஓடிவிட்டது.
அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார்சந்தேகிக்கின்றனர்.
அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது