கம்பீரமாய் நடந்தது இந்திய குடியரசு தின அணிவகுப்பு
டெல்லி:
இந்தியாவின் 53வது குடியரசு தின அணிவகுப்பு ராணுவ மிடுக்குடன் நடந்து முடிந்தது.
தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து இந்தியா தனது படைகளை பாகிஸ்தான் எல்லையில் குவித்துள்ளது. இதனால்,இந்த அணி வகுப்பு நடக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
ஆனால், இந்த அணிவகுப்பு நிச்சயம் நடக்கும் என ராணுவமும் மத்திய அரசும் அறிவித்தன.
அதே போல இன்று தொடங்கிய அணிவகுப்பு வண்ணமயமாகவும் கம்பீரமாகவும் நடந்தது. ஆனால், டாங்கிகள்,கவச வாகனங்கள், பீரங்கிகள், ரேடார்களின் அணிவகுப்பு நடக்கவில்லை. அதே போல அணிவகுப்பில் பங்கேற்றராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது.
ராணுவத்தினரும் பெருமளவிலான ஆயுதங்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் நாட்டு அதிபர் கசாம் உதீன் தனது மனைவியுடன் கலந்துகொண்டு அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ராணுவ வீரர்களின்மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் வாஜ்பாய் மறைந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் 3காவலர்களுக்கு அசோக் சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். அவர்களது குடும்பத்தினர் இந்த விருதுகளைப்பெற்றுக் கொண்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த 5 போலீசாருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 422ராணுவ, எல்லைப் பாதுகாப்புப் படை, போலீஸ், தீயணைப்புப் படை, ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவரின் விருதுகள் வழங்கப்பட்டன.
டெல்லியில் அதிபயங்கர பாதுகாப்பு:
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும்பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் 50,000 போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உயரமான கட்டடங்கள் அனைத்தும் நேற்று பிற்பகல் முதல் சீல் வைக்கப்பட்டு ராணுவத்தின்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டன.
தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் முக்கிய இடங்களில்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் இடங்களைச் சுற்றி விமான எதிர்ப்பு பீரங்கிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், சிறப்புக் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் நாடு முழுவதும் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் தேசியக் கொடிகளை பொது மக்களும் சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications