போலி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சென்னை:
போலி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழககல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறினார்.
பல ஆண்டுகளாக தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயின்று ஏமாந்தவர்களுக்கு கவுன்சிலிங் அமைத்துதிரும்பவும் ஆசிரியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி சென்னையில் இன்று (திங்கள்கிழமை) கவுன்சிலிங் நடைபெற்றது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமானோர்கலந்து கொண்டனர். இந்த கவுன்சிலிங்கைப் பார்வையிட வந்த தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த கவுன்சிலிங் மூலம் 15,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படும்.
இதுவரை விண்ணப்பம் அனுப்பாதவர்கள் 15 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அரசின் ஒப்புதல் பெறாமல் நடத்தப்படும் போலி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மீது தமிழக அரசுகடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என்று தம்பித்துரை கூறினார்.












Click it and Unblock the Notifications