4 தேனி மாணவர்கள் தற்கொலை: குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.25,000 உதவி
சென்னை:
போடிநாயக்கனூர் அருகே தற்கொலை செய்து கொண்ட 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில்ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) கூறினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலை கிராமத்தில் 6வது படிக்கும் 4 மாணவர்கள் குளத்தில்பிணமாக மிதந்தனர்.
இந்த 4 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பின்னர் நடந்த விசாரணையின்போது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சுரைக்காய் தோட்டத்திற்கு சென்று சுரைக்காய் திருடியுள்ளனர். அதைப் பார்த்ததோட்டக்காரர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆனால் எங்கே தங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்தால் அடிப்பார்களே என்று நினைத்த அந்த 4 சிறுவர்களும்தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பன்னீர்செல்வம், இந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கும் முதல்வர் நிவாரணநிதியிலிருந்து தலா ரூ.25,000 நஷ்டஈடு வழங்கப்படும் என்று கூறினார். இறந்துபோன 4 பேரின் குடும்பத்துக்கும்தன்னுடைய இரங்கலையும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications