4 தேனி மாணவர்கள் தற்கொலை: குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.25,000 உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போடிநாயக்கனூர் அருகே தற்கொலை செய்து கொண்ட 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில்ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) கூறினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலை கிராமத்தில் 6வது படிக்கும் 4 மாணவர்கள் குளத்தில்பிணமாக மிதந்தனர்.

இந்த 4 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பின்னர் நடந்த விசாரணையின்போது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சுரைக்காய் தோட்டத்திற்கு சென்று சுரைக்காய் திருடியுள்ளனர். அதைப் பார்த்ததோட்டக்காரர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

ஆனால் எங்கே தங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்தால் அடிப்பார்களே என்று நினைத்த அந்த 4 சிறுவர்களும்தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பன்னீர்செல்வம், இந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கும் முதல்வர் நிவாரணநிதியிலிருந்து தலா ரூ.25,000 நஷ்டஈடு வழங்கப்படும் என்று கூறினார். இறந்துபோன 4 பேரின் குடும்பத்துக்கும்தன்னுடைய இரங்கலையும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+