பீடி விற்பனைக்குத் தடை வந்தால் 7 லட்சம் பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பீடி, சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் பீடித்தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட பீடி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அப்துல் ஹமீத் செய்தியாளர்களிடம்கூறுகையில்,
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு தற்போது பொது இடங்களில் பீடி, சிகரெட்டுகள் பிடிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் பீடி,சிகரெட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப் போவதாக கூறப்படுகிறது.
அப்படி தடை விதிக்கப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.
எனவே இந்த முடிவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அப்துல் ஹமீத்.












Click it and Unblock the Notifications