கோவை வியாபாரிக்கு கத்திக் குத்து: ரூ.3 லட்சம் நகை பறிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வியாபாரியை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6பேர் கொண்ட ஒரு கும்பல் கத்தியால் குத்தி அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளைப் பறித்துச் சென்றது.
அந்த வியாபாரி கையில் சூட்கேசுடன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சில மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் அவரை வழிமறித்து அவர் வைத்திருந்த சூட்கேசைப்பறிக்க முயன்றனர்.
ஆனால் அவர் சூட்கேசை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதையடுத்து அந்தக் கும்பல் அந்தவியாபாரியின் வயிற்றில் சராமாரியாகக் கத்தியால் குத்தியது.
கத்திக் குத்து வாங்கிய அந்த வியாபாரி ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரியவே அந்தக் கும்பல் அவருடையசூட்கேசை எடுத்தக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
காயமடைந்த வியாபாரி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
கொள்ளைக் கும்பலால் பறித்துச் செல்லப்பட்ட அவருடைய சூட்கேசில் 750 கிராம் தங்க நகைகளும் ரூ.5,000பணமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என்றும் தெரிகிறது.
இது குறித்து கோயம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆறு கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications