3வது ஏவுகணையையும் செலுத்தியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் இன்று தன்னுடைய 3வது ஏவுகணையான அப்டாலியை ஏவி சோதனை செய்தது.
சிறிய வகையைச் சேர்ந்த அப்டாலி ஏவுகணையும் அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்தது. சுமார் 180கி.மீ. தூரம் சென்று தாக்க வல்லது இந்த ஏவுகணை.
அப்டாலி ஏவுகணை எல்லையில் உள்ள இந்தியப் பகுதிகளை மிக எளிதாகச் சென்று தாக்கும் திறன் கொண்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சனிக்கிழமை கோரிஏவுகணையை ஏவி சோதனை செய்த பாகிஸ்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை காஸ்னவி ஏவுகணையையும் ஏவியது.
நேற்று (திங்கள்கிழமை) தன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரானபர்வேஸ் முஷாரப் உரையாற்றிய நிலையில் இன்று அப்டாலியையும் அந்நாடு ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் சோதனைகளால் பயந்து விட மாட்டோம் என்று இந்தியா ஏற்கனவே கூறி விட்டது.
மே 25 முதல் 28ம் தேதி (அதாவது இன்று) வரை ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக முன்னதாகவே இந்தியாஉள்ளிட்ட அண்டை நாடுகளிடம் தெரிவித்து விட்டு தான் பாகிஸ்தான் இந்தச் சோதனைகளை நடத்தியுள்ளது.