பெயில் ஆன மாணவர்களுக்கு சென்னை, புதுவையில் ஆலோசனை முகாம்கள்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் விதமாகசென்னை பல்கலைக்கழகம் முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முக்கியமான அரசுப் பொதுத் தேர்வுகளின் முடிவுகளைத் தொடர்ந்து அதில் தோல்வியடையும் பலமாணவ-மாணவிகள் தற்கொலை என்ற முடிவுக்குச் செல்வது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
மாணவர்களின் இந்தத் தற்கொலை மனப்போக்கைத் தடுத்து நிறுத்துவதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்புமுகாமை நடத்துகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தைச் (என்.எஸ்.எஸ்.) சேர்ந்த மாணவ-மாணவியர் இந்தஆலோசனை முகாமை நடத்தவுள்ளனர்.
தோல்வியடைந்த மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது, மீண்டும் தேர்வு எழுத அவர்களைத்தயார்படுத்துவது ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இப்பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த முகாமின் போதுமாணவ-மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள்.
இதுதொடர்பான முன்பதிவுக்கு பேராசிரியர் சுரேந்திரனை 2436544 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
புதுவையிலும்...
சென்னையைப் போலவே பாண்டிச்சேரியிலும் "மைத்ரேயி தற்கொலைத் தடுப்பு நிறுவனம்" என்ற அமைப்புபாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஆலோசனை வழங்கவுள்ளது.
தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் மதிப்பெண்கள் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளமாணவ-மாணவிகளுக்கும் இந்நிறுவனம் ஆலோசனை வழங்குகிறது.
இதற்காக 339999 என்ற தொலைபேசி எண்ணைச் சுழற்றி மாணவ-மாணவிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
அம்மாணவ-மாணவிகள் தங்களுடைய பெயர், முகவரி எதையும் கூறவேண்டிய அவசியமில்லை என்றும்அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிறுவனத்திற்கு மாணவ-மாணவிகள் நேரிலும் சென்று ஆலோசனை பெறலாம். எண் 255, தியாகு முதலியார்வீதி, பாண்டிச்சேரி என்ற முகவரி கொண்ட இந்நிறுவனத்துக்குச் சென்று மாணவ-மாணவிகள் தங்களுக்குத்தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இன்றும் நாளையும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நிறுவனம் ஆலோசனை வழங்கும் என்றுகூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications