செல்போன் மூலம் உடனுக்குடன் கருணாநிதிக்கு தகவல் அனுப்பிய சைதை திமுக வேட்பாளர்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் நடத்தி வரும் அராஜகங்கள் குறித்து திமுக வேட்பாளரான மா.சுப்பிரமணியம் செல்போனில் உடனுக்குடன் திமுக தலைமைக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
இத்தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சுப்பிரமணியம் சுற்றிச் சென்று ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுக ஏஜென்டுகளை வாக்குச் சாவடிக்குள் செல்லவிடாமல்அதிமுகவினர் தடுத்ததைத் தொடர்ந்து திமுகவினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சுப்பிரமணியமும் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் திமுகவினர் இதுகுறித்து முறையிட்டனர்.
சுப்பிரமணியம் உடனடியாக செல்போனைக் கையிலெடுத்துக் கொண்டு திமுக தலைமையைத் தொடர்பு கொண்டுஅதிமுகவினரின் அராஜகங்களைப் பற்றித் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.
அவரைச் சுற்றிலும் திமுகவினரும் நின்று கொண்டு அவருக்குத் தேவையான தகவல்களை அளித்துக் கொண்டேஇருந்தனர்.












Click it and Unblock the Notifications