சென்னையை கலக்கிய மதம் பிடித்த யானை: வாகனங்களை தூக்கி எறிந்தது
சென்னை:
சென்னையில் பசியின் கொடுமையால் மதம் பிடித்து சாலையில் ஓடிய யானை ஜீப், வேன் போன்ற வாகனங்களைமிதித்து நொறுக்கி துவம்சம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
சென்னை-வடபழனியில் தனியாருக்குச் சொந்தமான "வஜீலா" என்ற யானை உள்ளது. இந்த யானையின் பாகன்ஜார்ஜ் அந்த யானையைக் கட்டிப் போட்டு விட்டு நேற்று சாப்பிடச் சென்று விட்டார்.
அப்போது திடீரென்று பயங்கரமாகப் பிளிறிய யானை கட்டுக்களை எல்லாம் அவிழ்த்துக் கொண்டு சாலையில்இறங்கி ஓட ஆரம்பித்தது.
இதனால் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் தலைதெறிக்க சிதறி ஓட ஆரம்பித்தனர். அந்தயானைக்கு மதம் தான் பிடித்து விட்டது என்று கருதிய அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் பயந்து போய் தங்கள்வீட்டின் மாடிகளுக்குச் சென்று நின்று கொண்டனர்.
இதற்கிடையே சாலையில் தாறுமாறாக ஓடிய யானை அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்புக்குள் புகுந்துஅங்கிருந்த ஒரு ஜீப் மற்றும் ஒரு வேனை பயங்கரமாகத் தாக்கி மிதிக்க ஆரம்பித்தது.
இதில் அந்த இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கி நசுங்கி விட்டன.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்கவே, வனத்துறை அதிகாரிகளுடன் போலீசார்அப்பகுதிக்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யானைக்கு வாழைப்பழம், தென்னை மர ஓலைகள் ஆகியவற்றைச்சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த யானையும் அவற்றைச் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருந்தது.
பசியின் காரணமாகவே இத்தனை அமளி துமளிகளையும் அந்த யானை செய்து விட்டது என்று பின்னர் தெரியவந்தது.
இருந்தாலும் வனத்துறை அதிகாரிகள் அந்த யானையையும் அதன் பாகனையும் கிண்டி சிறுவர் பூங்காவிற்குக்கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
யானையைக் கட்டிப் போட்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யானையிடம் வம்பு செய்ததாகவும் அதனால்தான் யானை கோபமடைந்து கட்டுக்களை அறுத்துக் கொண்டு அட்டகாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வடபழனி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications