ரகுபதியின் வங்கி லாக்கர்களில் லஞ்ச-ஒழிப்பு போலீசார் சோதனை

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

முன்னாள் அதிமுக அமைச்சர் ரகுபதியின் வீட்டில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்துநேற்று அவருடைய வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவிவகித்த ரகுபதி கடந்த 2000ம் ஆண்டு திமுகவுக்குத் தாவினார்.

கடந்த சனிக்கிழமை முன்னாள் திமுக அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் ஜெனிபர் சந்திரன் மற்றும்காங்கிரஸ் பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில்ரகுபதியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் போது ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றுடன் வெளிநாடுகளிலிருந்து பணம் வந்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றையும் போலீசார்கைப்பற்றினர்.

இந்நிலையில் ரகுபதியின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். இந்தலாக்கர்களில் அவருடைய பெயரிலும் அவர் குடும்பத்தினரின் பெயர்களிலும் வைக்கப்பட்டுள்ள நகைகளின்விவரம் குறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

இங்கு பல மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையின் போது ரகுபதியின் மனைவி சரோஜாவும் மகள்கவிதாவும் உடன் இருந்தனர்.

வீட்டில் 2வது நாளாக சோதனை:

முன்னதாக ரகுபதியின் புதுக்கோட்டை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று 2வது நாளாக சோதனைநடத்தினர்.

சோதனை நடந்து கொண்டிருந்த போது ரகுபதி வீட்டில் இல்லை. புதுக்கோட்டையில் திமுகவினர் நடத்தியகண்டனப் பேரணியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.

இருந்தாலும் ரகுபதிக்காகக் காத்திருக்காமல் போலீசார் தொடர்ந்து அங்கு சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமை அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நேற்று புதுக்கோட்டைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+