பீடி, சிகரெட் கேட்டு மரத்தில் ஏறி போராடிய மதுரை சிறைக் கைதிகள்
மதுரை:
தங்களுக்கு பீடி, சிகரெட் கொடுக்க வேண்டும் என்று கோரி மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் அங்குள்ளமரத்திலும் காம்பவுண்ட் சுவரிலும் ஏறி நின்று கொண்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் திடீரென்று மரங்களின் மீதும் காம்பவுண்ட் சுவர் மீதும் ஏறிநின்று கொண்டு கீழே இறங்க மறுத்தனர்.
தங்களுக்கு பீடி மற்றும் சிகரெட் வழங்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தால் தான் கீழே இறங்குவோம் என்று கூறிகைதிகள் அடம் பிடித்தனர்.
அவர்களை கீழே இறங்குமாறு சிறை அதிகாரிகள் பலமுறை கூறியும் அவர்கள் கீழே இறங்க மறுத்தனர்.
இதையடுத்து தீயணைப்புத்துறையினரை அழைத்த சிறை அதிகாரிகள் அவர்களை வைத்துக் கொண்டேமரத்திலிருந்தும் காம்பவுண்ட் சுவரிலிருந்தும் ஒரு வழியாகக் கைதிகளைக் கீழே இறக்கி, சிறைகளில் அடைத்தனர்.
மதுரை சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க வருபவர்களே அங்குள்ள கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்கிறார்கள்என்பதும் இதற்குப் பல போலீசாரும் உடந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications