வைகோவின் சிறைவாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காலம் மேலும 5நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை 11ம் தேதி வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைதாகி இன்றுடன் 85நாட்கள் முடிவடைகின்றன. அவர் மீது இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, விசாரணையும்தொடங்கவில்லை.
இந் நிலையில் வைகோ இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், வைகோவை தொடர்ந்து சிறையில் வைக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வரும்9ம் தேதி (கைதாகி 90 நாட்கள் முடிவடையும் நாள்) வரை வைகோவை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக வைகோவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாளை கணக்கில் வைத்து இன்றுடன் அவரதுசிறைக்காலம் 90வது நாளை எட்டியதாகக் கூறப்பட்டது. ஆனால், 9ம் தேதி தான் அவரது 90 நாள் சிறைவாசம்முடிவடைகிறது.
பொடா சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து விசாரணை இல்லாமல், குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யாமல்90 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்க முடியாது என வைகோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மதிமுகவினர் பாதயாத்திரை:
மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எட்டயபுரத்திலிருந்து மதுரைக்கு"பாதயாத்திரை" மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்திலிருந்து வரும் 9ம் தேதி இந்தப் பாதயாத்திரை தொடங்குகிறது.மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமானமதிமுக தொண்டர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அங்கிருந்து சுமார் 250 கி.மீ. தூரம் நடைப் பயணம் செய்து வரும் 17ம் தேதி அவர்கள் மதுரையை அடைவார்கள்.பின்னர் மதுரையில் வைகோ கைதைக் கண்டித்து ஒரு கண்டனப் பொதுக் கூட்டமும் நடைபெறும் என்று அந்தச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் திருச்சியிலிருந்து வேலூருக்கு மதிமுகவினர் இதேபோல் நடைப் பயணம்மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications